கருத்துரையும் கலந்துரையாடலும் – 22.01.2019

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இன்று (22.01.1019) இசை, நடன ,நாடகத்துறை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழர் இசைமரபு, தமிழர் ஆடல் மரபு, தமிழர் வாழ்வியலும் நாட்டார் இசை மரபும் என்ற பொருண்மையிலான கருத்துரையும் கலந்துரையாடலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்தியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 25 புலமையாளர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பேராசிரியர் அறு இராமநாதன், முனைவர் சரஸ்வதி இராமநாதன், முனைவர் சண்முக செல்வகணபதி, முனைவர், சு.நரேந்திரன், முனைவர் செ. கற்பகம், முனைவர் பார்வதி பாலசுப்பிரமணியம், கவிஞர் சண் அரட்பிரகாசம், முனைவர் கலைவேந்தன் ஆகியோர் நிறுவக மாணவர்களுக்கு தத்தம் துறை சார்ந்த கருத்துரைகளையும் ஆலோசனைகளைளயம் வழங்கினர்.