பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய மாணவர்களுக்கான அறிவித்தல் – 2018/2019


சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2018/2019 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கு நிறுவக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய மாணவர்களுக்கான அறிவித்தல்

நிறுவக இணையத்தளத்தில் பதிவுகளை மேற்கொள்ளத் தவறிய மாணவர்கள் எதிர்வரும் 21.02.2021 ஆந் திகதிக்கு முன்னர் எமது  www.svias.esn.ac.lk என்ற  இணையத்தளத்தில் ஒன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

பதிவினை மேற்கொண்ட பின்னர் 25.02.2021 ஆந்  திகதிக்கு முன்பதாக ஆவணங்களை சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின்   மாணவர் அனுமதிகள் கிளையில் பிரதிப் பதிவாளரிடம்  ஒப்படைத்து, ஒப்படைத்தமைக்கான ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளவும்.

மாணவர்கள் வருகைதரும்போது தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு முகக்கவசம் உட்பட இன்னும் உரிய ஏற்பாடுகளுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

பிரதிப்பதிவாளர்

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்