புதிய உபவேந்தர் கௌரவிப்பு நிகழ்வு


மாசி மாதம்‌ 17ம்‌ திகதி,2022 அன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின்‌ பத்தாவது உபவேந்தராக தெரிவு செய்யப்பெற்ற பேராசிரியர்‌ வல்லிபுரம்‌ கனகசிங்கம்‌ அவர்களை சுவாமி விபுலானந்த அழகியல்‌ கற்கைகள்‌ நிறுவகத்திற்கு வரவேற்கப்பட்டிருந்தார்‌. இந்நிகழ்வில்‌ விபுலானந்தருக்கு மாலை அணிவிக்கப்பட்டு
நிறுவகத்தின்‌ இன்னிய அணியின்‌ வாத்திய முழக்கம்‌, ஆடல்‌ அசைவுகளுடன்‌ உபவேந்தர்‌ வரவேற்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இசைத்துறையின்‌ சிரேஷ்ட விரிவுரையாளர்‌ கலாநிதி சியாமளாங்கி கருணாகரன்‌ அவர்களின்‌ மாணவர்களினால்‌ விபுலானந்த கீதம்‌ மற்றும்‌ தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டதுடன்‌ நடன நாடகத்துறையின்‌ சிரேஷ்ட விரிவுரையாளர்‌ கலாநிதி திருமதி துஷ்யந்தி ஜீலியன்‌ ஜெயபிரகாஷ்‌ அவர்களாலும்‌ மற்றும்‌ போதனாசிரியர்‌ திரு. ௧.
துவாஸ்கர்‌ அவர்களின்‌ நெறியாள்கையில்‌ நடன நிகழ்வுகள்‌ அரங்கேற்றப்பெற்றன.

அதனைத்தொடர்ந்து இசைத்துறை விரிவுரையாளர்‌ ஐஸ்வர்யா கணேசன்‌ அவர்களின்‌ நெறியாள்கையில்‌ பல்லிய நிகழ்வும்‌ சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வினை கலாநிதி தெட்சிணாமூர்த்தி பிரதீபன்‌ அவர்களும்‌ திரு. ௧.
மோகனதாசன்‌ அவர்களும்‌ தொகுத்து வழங்கினர்‌. மேலும்‌ ஒலி அமைப்பினை திரு. கு. யூட்‌ நிரோஷன்‌ அவர்களும்‌ ஒளி அமைப்பினை திரு. தி. தர்மலிங்கம்‌ அவர்களும்‌ செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்‌ இந்நிகழ்வினை கலாநிதி தெட்சிணாமூர்த்தி பிரதீபன்‌ அவர்கள்‌ ஒருங்கமைப்பு செய்திருந்தார்‌.